நீ ஆன் சிட்டியில் கீழே விழுந்து ஆடவர் மரணம்
நீ ஆன் சிட்டி (Ngee Ann City) கடைத்தொகுதியில் உயரத்திலிருந்து கீழே விழுந்த ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீ ஆன் சிட்டி (Ngee Ann City) கடைத்தொகுதியில் உயரத்திலிருந்து கீழே விழுந்த ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இன்று பிற்பகல் நடந்தது.
மாண்ட ஆடவருக்கு 35 வயது.
அவர் மூன்றாம் தளத்தில் இருந்து பேஸ்மண்ட் இரண்டில் (Basement 2 level) விழுந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பாகப் பிற்பகல் 2 மணிக்குக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
ஆடவர் பேச்சு அசைவற்றுக் கிடந்ததாகவும் அதன் பின்னர் டான் டொக் செங் மருத்துவமனைக்கு (Tan Tock Seng Hospital) கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பேஸ்மண்ட் இரண்டில் சம்பவ இடத்தைக் காவல்துறையினர் மூடிவிட்டனர். அந்த இடத்தில் ரத்தக்கறைகள் இருந்தன.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.