Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

8 வயதுச் சிறுமியை சைக்கிளில் மோதிய சந்தேகத்தில் பதின்ம வயது ஆடவர் கைது

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் 8 வயதுச் சிறுமியை சைக்கிளால் மோதியதாகச் சந்தேகிக்கப்படும் பதின்ம வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
8 வயதுச் சிறுமியை சைக்கிளில் மோதிய சந்தேகத்தில் பதின்ம வயது ஆடவர் கைது

(கோப்புப் படம்: CNA)

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் 8 வயதுச் சிறுமியை சைக்கிளால் மோதியதாகச் சந்தேகிக்கப்படும் பதின்ம வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயது நிரம்பிய அந்த ஆடவர் கவனக்குறைவால், சிறுமிக்கு மோசமான காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.

நேற்று மதியம் சுமார் இரண்டரை மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடைபாதையில் சென்று கொண்டிருந்த சிறுமி கடுமையாகக் காயமடைந்தார்.

பின்னர் அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது.

கவனக்குறைவால் மோசமான காயங்கள் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்