Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துமாசிக் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு. தில்ஹான் பிள்ளை பொறுப்பேற்கிறார்

துமாசிக் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு. தில்ஹான் பிள்ளை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பொறுப்பேற்கிறார்.

வாசிப்புநேரம் -
துமாசிக் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு. தில்ஹான் பிள்ளை பொறுப்பேற்கிறார்

படம்: Temasek Holdings

துமாசிக் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு. தில்ஹான் பிள்ளை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பொறுப்பேற்கிறார்.

தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான திரு. லீ தெங் கியெட்டுக்குப் பதில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்பார்.

அதே நாளில் திரு. லீ , துமாசிக் நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார். தற்போது அந்தப் பொறுப்பில் திருவாட்டி ஹோ சிங் உள்ளார்.

திரு. தில்ஹான் பிள்ளை துமாசிக் நிறுவனத்தில் வலுவான தலைமைத்துவத்தைக் கொண்டுவருவார் என்றும், அவர் தொலைநோக்குடன் செயல்படக்கூடியவர் என்றும் திரு. லீ கூறினார்.

2010ஆம் ஆண்டில் இருந்து திரு. தில்ஹான் பிள்ளை துமாசிக் நிறுவனத்தில் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளில் இருந்துவந்துள்ளார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்