கிழக்கு-மேற்கு பாதையில் 5 ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் புதிய சமிக்ஞை முறை சோதனை
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் புதிய சமிக்ஞை முறை இம்மாதம் 29 தேதியிலிருந்து மே 27 வரை 5 ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் சோதிக்கப்படும்.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் புதிய சமிக்ஞை முறை இம்மாதம் 29 தேதியிலிருந்து மே 27 வரை 5 ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் சோதிக்கப்படும். நிலப் போக்குவரத்து ஆணையமும் SMRT நிறுவனமும் இணைந்து வெளியிட்ட செய்தியறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கல் சர்க்கல் நிலையத்திற்கும் ஜூ கூன் நிலையத்திற்கும் இடையிலான ரயில் சேவை, சோதனையின் போது மீண்டும் செயல்படத் தொடங்கும். அவ்விரு நிலையங்களை இணைக்கும் பேருந்துச் சேவைகள் அந்தத் தேதிகளில் இயங்க மாட்டா.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சோதனைகளால் கிழக்கு-மேற்கு பாதையின் ரயில் சேவை அட்டவணையில் எந்தப் பாதிப்பும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பயணிகள் அவ்வப்போது தாமதத்தை எதிர்நோக்கக்கூடும் எனக் கூறப்பட்டது.