Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டயக் கல்வி மாணவர்கள் சிலருக்கு மேலும் ஒரு பாடம் பயில வாய்ப்பு

மூவாண்டுப் பட்டயப் படிப்பை முடித்து சான்றிதழ் பெறும்போது, அந்த ஒரு பாடத்துக்கான சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்படும்.

வாசிப்புநேரம் -
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டயக் கல்வி மாணவர்கள் சிலருக்கு மேலும் ஒரு பாடம் பயில வாய்ப்பு

(படம்:Ngee Ann Polytechnic இணையத்தளம்)


நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களில் சிலருக்குத், தங்கள் பட்டயப் படிப்பில் மேலும் ஒரு பாடத்தைச் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூவாண்டுப் பட்டயப் படிப்பை முடித்து சான்றிதழ் பெறும்போது, அந்த ஒரு பாடத்துக்கான சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்படும்.

மாணவர்களை வேலைச் சந்தைக்குத் தயார்செய்வதும், அவர்களின் மீள்திறனை மேம்படுத்துவதும் திட்டத்தின் நோக்கம்.

கடந்த கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, "Personalised Learning Pathway" எனும் அந்தத் தனிப்பட்ட கற்றல் பாதைக்கான முன்னோடித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம், தரவு-பகுப்பாய்வு, தொழில்முனைப்பு போன்ற 10 பாடங்களில் இருந்து ஒன்றைச், சுமார் ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்வர்.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், 2023 கல்வியாண்டுக்குள் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முழுநேரப் பட்டயப் படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்