பிரிட்டன் அரசாங்கம், சிங்கப்பூர்க் கடற்படையை மலாயா கடற்படையிடம் ஒப்படைத்த நாள்
பிரிட்டனின் கீழ் இருந்த மலாயா கூட்டரசாங்கம் சுதந்திரம் பெற்றதைத் தொடந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
பிரிட்டனின் கீழ் இருந்த மலாயா கூட்டரசாங்கம் சுதந்திரம் பெற்றதைத் தொடந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
பிரிட்டன் அரசாங்கம், சிங்கப்பூர்க் கடற்படையை, மலாயா கூட்டரசாங்கத்தின் கடற்படையிடம் ஒப்படைத்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வு 1958ஆம் ஆண்டு இன்றைய தினம் உட்லண்ட்ஸில் உள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து முதலமைச்சர் லிம் இயூ ஹோக்கும், மலாயா கூட்டரசாங்கத்தைப் பிரதிநிதித்து அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
20 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கப்பல்களும், கருவிகள் வாங்க சுமார் ஒன்றேகால் மில்லியன் வெள்ளியும் மலாயா கடற்படைக்கு வழங்கப்பட்டன.