சிங்கப்பூரின் அஞ்சல் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தஞ்சோங் பகாரில் திறக்கப்பட்ட நிலையம்
1973ஆம் ஆண்டிலிருந்து 1977-ஆம் ஆண்டுக்குள், 27 புதிய அஞ்சல் அலுவலகங்கள் சேவையாற்றத் தொடங்கின.
22 ஜூன் 1977
மக்களின் தேவைக்கேற்ப அஞ்சல் சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் முக்கிய இடங்களில் அலுவலகங்களை அமைத்தது அஞ்சல்துறை.
1973ஆம் ஆண்டிலிருந்து 1977-ஆம் ஆண்டுக்குள், 27 புதிய அஞ்சல் அலுவலகங்கள் சேவையாற்றத் தொடங்கின.
1977ஆம் ஆண்டு இன்றைய தினம் தஞ்சோங் பகார் பிளாசாவில் அஞ்சல் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
விரைவு அஞ்சல் விநியோகம், கூடுதல் சேவைகள், புதிய தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட செயல்பாடுகள் போன்ற மாற்றங்கள் குறித்து அஞ்சல் நிலையத்தின் திறப்புவிழாவில் அறிவிக்கப்பட்டது.