49 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடந்த இறுதிச்சுற்றுக் காற்பந்தாட்டம்
70ஆவது நிமிடத்துக்குப் பிறகு ஆட்டம் மேலும் சூடுபிடித்தது.
24 ஜூன் 1973
49 ஆண்டுகளுக்குப் பிறகு, சுல்தான் தங்கக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்று சிங்கப்பூரில் நடந்தது.
1973இல் இன்றைய தினம் சிங்கப்பூர் அணியும் கிளாந்தான் அணியும் தேசிய விளையாட்டரங்கில் மோதின.
ஆட்டத்தைக் காண சுமார் 32,000 பேர் விளையாட்டரங்கில் கூடினர்.
பரபரப்பான ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்துக்குப் பிறகு, சிங்கப்பூர் அணி ஒரு கோலைப் புகுத்தியது.
70ஆவது நிமிடத்துக்குப் பிறகு ஆட்டம் மேலும் சூடுபிடித்தது.
4 க்குக்கு 1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றிக்கிண்ணத்தையும் 20,000 வெள்ளிப் பரிசுப் பணத்தையும் வென்றது.