சிங்கப்பூர் மோட்டார் விளையாட்டுச் சங்கம் அமைக்கப்பட்ட நாள்
சிங்கப்பூரில் 1929ஆம் ஆண்டிலேயே மோட்டார் விளையாட்டுகள் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் 1929ஆம் ஆண்டிலேயே மோட்டார் விளையாட்டுகள் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
எனினும் 1960களில் பிரிட்டனின் இராணுவப் படைகள் சிங்கப்பூரை விட்டு வெளியானதைத் தொடர்ந்து அவை இங்கு மீண்டும் பிரபலமாயின.
இரண்டு வெவ்வேறு சங்கங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 1969ஆம் ஆண்டு இன்றைய தினம் சிங்கப்பூர் மோட்டார் விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டது.
1996ஆம் ஆண்டு சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் ஆலோசனையின் பேரில், மன்றமாக இருந்த அது சிங்கப்பூர் மோட்டார் விளையாட்டுச் சங்கம் எனப் புதிய பரிமாணம் பெற்றது.