தற்காப்புப் படைகளை ஒன்றிணைத்த சட்டம் நடப்புக்கு வந்த நாள்
1972ஆம் ஆண்டு இன்றைய தினம் என்ன நடந்தது?
தற்காப்புப் படைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் அவற்றின் ஆற்றல்களை வலுப்படுத்தவும் அறிமுகமானது சிங்கப்பூர் ஆயுதப் படைச் சட்டம்.
இராணுவம், கடற்படை, ஆகாயப் படை ஆகியவற்றை ஒரே படையின்கீழ் கொண்டுவந்த சிங்கப்பூர் ஆயுதப் படைச் சட்டம், 1972ஆம் ஆண்டு இன்றைய தினம் நடப்புக்கு வந்தது.
சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இராணுவத்தின் ஒழுங்குமுறை நடைமுறைகளில், குறிப்பாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. மூத்த, இளம் அதிகாரிகளும் மூத்த தளபதிகளும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.