சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத் தாக்கல் தினம்
சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெறவிருக்கிறது.
சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெறவிருக்கிறது.
உத்தேச வேட்பாளர்கள் இன்று தங்கள் மனுக்களைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு உரியவர்கள் வேட்பாளர்களாக உறுதிப்படுத்தப்படுவர்.
சிங்கப்பூரில் 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் உள்ளன.
முற்பகல் 11 மணியிலிருந்து நண்பகலுக்குள் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.