தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய சேவையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள்
தேசிய சேவையாளர்களில் 427 பேரின் தனிப்பட்ட தகவல்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய சேவையாளர்களில் 427 பேரின் தனிப்பட்ட தகவல்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் ஆயுதப் படையையும், உள்துறை அமைச்சுக் குழுக்களையும் அவர்கள் சேர்ந்தவர்கள்.
தேசிய சேவையாளர்களின் தகவல்கள், அவர்களுக்கு இடையே அனுப்பி வைக்கப்பட்டது.
சலுகைச் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று, சேவைகளில் மாற்றங்களைச் செய்தபோது கோளாறு ஏற்பட்டது.
தேசிய சேவை உன்னத விருது, தேசிய சேவையாளர்களுக்கான பரிசுப் பொருட்கள் ஆகிய இரண்டு சலுகைத் திட்டங்களின் கீழ், அந்த தேசிய சேவையாளர்கள் தங்கள் சலுகைகளைப் பெற்றுக்கொண்டதாக, தற்காப்பு அமைச்சும், உள்துறை அமைச்சும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சுகள் கூறின.
அது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், அனைத்து தேசிய சேவையாளர்களுக்கான சலுகைச் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் சேவை வழங்கும் நிறுவனம் குறிப்பிட்டது.