NTUC Fairprice பேரங்காடிக் கிளைகள் அனைத்திலும் இடம்பெறும் நேரடி தேசியதினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு
NTUC Fairprice பேரங்காடி, FairPrice, FairPrice Finest, FairPrice Xtra ஆகியவற்றின் அனைத்துக் கிளைகளிலும், தேசிய தினத்தை ஒட்டிய நேரடிப் பற்றுறுதிச் சடங்கு நடைபெறும்.
NTUC Fairprice பேரங்காடி, FairPrice, FairPrice Finest, FairPrice Xtra ஆகியவற்றின் அனைத்துக் கிளைகளிலும், தேசிய தினத்தை ஒட்டிய நேரடிப் பற்றுறுதிச் சடங்கு நடைபெறும்.
வாடிக்கையாளர்களும் அதில் பங்கேற்கலாம் என, Fairprice வெளியிட்ட அறிக்கை கேட்டுக்கொண்டது.
"கடந்த ஆண்டுகளைப்போல், இந்த ஆண்டு நாம் அனைவரும் ஒன்றுகூடி தேசிய தினத்தைக் கொண்டாட முடியவில்லை. அதனால், பற்றுறுதி எடுக்கும் நேரம் இன்னும் அர்த்தம் மிக்கதாக மாறியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுகூடி ஒற்றுமையை வெளிப்படுத்த அது உதவுகிறது"
என்று Fairprice குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
பொது எச்சரிக்கை முறை, இரவு 8.20 மணிக்கு ஒலித்தவுடன், தேசியதினப் பற்றுறுதி நிகழ்ச்சி இடம்பெறும்.
அப்போது கடைகளில் இருக்கும் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அதில் பங்கேற்குமாறு அறிவிக்கப்படும்.
தேசிய தினத்தன்று காலையில் நடைபெற உள்ள, கொடியேற்றும் சடங்கிலும் தேசிய கீதத்தை இசைக்கும் நிகழ்ச்சியிலும் FairPrice கலந்துகொள்ளும் என்று அதன் அறிக்கை குறிப்பிட்டது.
வர்த்தக, தொழில் துறையின் பிரதிநிதியாக FairPrice Hub தேர்ந்தெடுக்கப்பட்டது.
கிருமிப்பரவல் சூழலில், சிங்கப்பூரர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி, நியாயமான விலையில் FairPrice விநியோகித்துவருவதன் முக்கியத்துவத்தை அது உணர்த்துகிறது.