Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

GCE O Level சாதாரண நிலைத் தேர்வில் 85.2% மாணவர்கள் குறைந்தது 5 பாடங்களில் தேர்ச்சி

சாதாரண நிலைத் தேர்வைக் கடந்த ஆண்டு எழுதிய மாணவர்களில் 85.2 விழுக்காட்டினர் குறைந்தது 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சாதாரண நிலைத் தேர்வைக் கடந்த ஆண்டு எழுதிய மாணவர்களில் 85.2 விழுக்காட்டினர் குறைந்தது 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இன்று தங்கள் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு 24,409 மாணவர்கள் சாதாரண நிலைத் தேர்வை எழுதினர்.

அவர்களில் 99.9 விழுக்காட்டினர் (24,377) குறைந்தது ஒரு பாடத்திலாவது தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96.5 விழுக்காட்டினர் (23,550) குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடக்கக் கல்லூரிகள், மில்லனியா கல்வி நிலையம், பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கையின்வழி இன்றிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி மாலை 4 மணிவரை பதிவு செய்யலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்