சக ஊழியரிடம் ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆடவருக்குச் சிறை
சக ஊழியரிடம் தாம் இடம்பெற்ற ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆடவருக்கு 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்: சக ஊழியரிடம் தாம் இடம்பெற்ற ஆபாசக் காணொளியைக் காட்டிய ஆடவருக்கு 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
41 வயது ஹேரிஸ் கார்டர் சாய் (Harris Carter Chai) வேலை நேரத்தின்போது அந்தப் பெண் ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தமது கைபேசியிலிருந்த ஆபாசக் காணொளியை அந்தப் பெண்ணிடம் காட்டினார்.
அதில் இடம்பெற்ற தமது உடல் உறுப்புகள் பற்றியும் அந்த ஆடவர் பேசத் தொடங்கினார்.
அதிர்ச்சியடைந்த மாது காவல்துறையிடம் புகார் தொடுத்தார்.
சாயின் கைபேசியைச் சோதனையிட்டதில் அதில் 47 ஆபாசக் காணொளிகள் இருப்பது தெரியவந்தது.
தற்போது 5,000 வெள்ளி பிணையில் இருக்கும் சாய், அடுத்த வாரம் சிறைத்தண்டனையைத் தொடங்குவார்.
ஆபாசக் காணொளியை வைத்திருந்ததற்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனையும், 40,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.