முன்னாள் அமைச்சர் ஒங் பாங் பூனுக்கு மேன்மை தங்கிய சேவைப் பதக்கம்
சிங்கப்பூருக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் சிறந்த பங்காற்றிய முன்னாள் அமைச்சர் ஒங் பாங் பூனுக்கு (Ong Pang Boon) மேன்மை தங்கிய சேவைப் பதக்கம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் மக்கள் செயல் கட்சிக்கும் சிறந்த பங்காற்றிய முன்னாள் அமைச்சர் ஒங் பாங் பூனுக்கு (Ong Pang Boon) மேன்மை தங்கிய சேவைப் பதக்கம் வழங்கப்பட்டது.
அது, மக்கள் செயல் கட்சி வழங்கும் விருதுகளில் ஆக உயரியது.
மக்கள் செயல் கட்சியின் முதல் அமைப்புச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் திரு. ஓங்.
அவர், 1959 இல் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
பல்வேறு பொறுப்பு வகித்த அவர், கல்வி, ஊழியரணி, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் சேவையாற்றியவர்.
கல்வியமைச்சராக இருந்தபோது, சிங்கப்பூரின் கல்விச் சூழலை மேம்படுத்திய திரு ஓங், இரு மொழிக் கொள்கைக்கு வழியமைத்தார்.
மாணவர்கள் தேசிய உறுதிமொழியேற்க வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தவர் திரு. ஓங்.
கட்சிப் பங்களிப்புக்காக சுமார் 400 உறுப்பினர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.