கார் நிறுத்துமிடத்தில் இரு கார்கள் மீது கார் ஏறியது - காரில் ஒருவர் சிக்கினார்
ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்திருக்கும் கார் நிறுத்துமிடத்தில் இரு கார்கள் மீது ஏறிய BMW காரில் சிக்கிக்கொண்ட வயதான ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்திருக்கும் கார் நிறுத்துமிடத்தில் இரு கார்கள் மீது ஏறிய BMW காரில் சிக்கிக்கொண்ட வயதான ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
Wheelock Place கடைத்தொகுதியின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்துமிடத்தில் விபத்து நேர்ந்ததாக நேற்று (ஜூன் 12) மாலை 4 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
BMW காரின் ஒரு புறத்திலுள்ள இரு சக்கரங்கள், நிறுத்தப்பட்டிருந்த அவ்விரு கார்கள் மீது ஏறியிருந்தன.
எஞ்சிய இரு சக்கரங்கள் தரையில் இருந்தன.
சம்பவ இடத்திற்கு இரு தீயணைப்பு வண்டிகள், இரு தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள், ஒரு மருத்துவ வண்டி ஆகியவை அனுப்பப்பட்டன.
வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வயதானவர் மருத்துவ உதவியாளரால் பரிசோதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.
சம்பவத்தைப் பற்றி Facebookஇல் பரவி வரும் காணொளியின்படி, சம்பந்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.