Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Orchard Towers கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை

Orchard Towers கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்குக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

Orchard Towers கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்குக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 வயது சான் ஜியா ஸிங் (Chan Jia Xing) ஆயுதந்தாங்கிய நபருடன் இருந்ததற்கு அந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

எச்சரிக்கையின்கீழ் அவர், ஓராண்டு காலத்திற்கு எந்தக் குற்றங்களையும் புரியக்கூடாது.

எச்சரிக்கை குற்றமாகப் பதிவாகாது என்று தெரிவிக்கப்பட்டது.

கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இதர ஐந்து பேருக்குக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு சண்டையில் திரு சத்தீஷ் நோயெல் கோபிதாஸ் கழுத்தில் கத்தியால் குத்துப்பட்டு மரணமடைந்தார்.

அதன் தொடர்பில் கைதானவர்களில் தற்போது டான் சென் யாங் என்பவர் மட்டுமே கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்