ஓவன் ரோட்டில் வழிப்பறிக் கொள்ளை - 34-வயது சந்தேக நபர் கைது
ஓவன் ரோட்டில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓவன் ரோட்டில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) பிற்பகலில் வழிப்பறி நடத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிராங்கூன் ரோடு அருகில் அமைந்துள்ள ஓவன் ரோட்டில் 75-வயது ஆடவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
முதியவரிடமிருந்து நகை, கைத்தொலைபேசி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆடவர் ஹவ்காங் அவென்யு 1 இல் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.