Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓவன் ரோட்டில் வழிப்பறிக் கொள்ளை - 34-வயது சந்தேக நபர் கைது

ஓவன் ரோட்டில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

ஓவன் ரோட்டில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) பிற்பகலில் வழிப்பறி நடத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிராங்கூன் ரோடு அருகில் அமைந்துள்ள ஓவன் ரோட்டில் 75-வயது ஆடவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

முதியவரிடமிருந்து நகை, கைத்தொலைபேசி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆடவர் ஹவ்காங் அவென்யு 1 இல் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்