மாணவர்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியருக்குச் சிறை
மாணவர்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியருக்கு ஆறரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மாணவர்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியருக்கு ஆறரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த 36 வயது ஆசிரியர், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் ஒரு பள்ளியில் பணிபுரிந்தபோது அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் மாணவர் ஒருவரை மானபங்கம் செய்ததாகவும் தமது வீட்டில் மூன்று மாணவர்களிடம் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
2016ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தச் சம்பவங்கள் நடந்தன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அப்போது 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் காவல்துறையிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.
திருமணமான அந்த ஆசிரியருக்குப் பிள்ளைகள் மீது பாலியல் ரீதியான ஈர்ப்பு இருப்பதாகத் தெரியவந்தது.