சிங்கப்பூரில் புதிதாகப் பிறந்த பாண்டாக் குட்டியைப் பார்த்துக் கொண்டே வேலை செய்ய ஆசையா ?
சிங்கப்பூரில் புதிதாகப் பிறந்த பாண்டாக் குட்டியைப் பார்த்துக் கொண்டே வேலை செய்ய ஆசையா ?
சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் ஜியா ஜியா (Jia Jia), காய் காய் (Kai Kai) ஜோடிக்குப் பிறந்த ஆண் பாண்டாக் குட்டியைப் பார்த்துக்கொண்டே வேலை செய்ய ஆசையா ?
அதற்கான ஒரு வாய்ப்பை சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் ஏற்படுத்தியுள்ளது.
Panda Intern என்று அழைக்கப்படும் அந்தப் பயில்நிலைப் பயிற்சி வாய்ப்பு சுமார் 6 மாத காலத்திற்கானது.
விலங்குகள் மீது ஆர்வமும் அதே நேரம் மின்னிலக்கத்திலும் கதை சொல்வதிலும் விருப்பம் கொண்டவர்களுக்கு அந்தப் பணி பொருத்தமாக இருக்கும் என்று வனவிலங்குக் காப்பகம் குறிப்பிட்டது.
செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அந்த பணிக்கான விளம்பரம் Linked In பக்கத்தில் பகிரப்பட்டது.
- CNA/mm