தேர்தல் அறிக்கைகளை உரிய நேரத்தில் வெளியிடுவோம்: மக்கள் செயல் கட்சி
தேர்தல் அறிக்கைகளை உரிய நேரத்தில் வெளியிடுவோம்: மக்கள் செயல் கட்சி
மக்கள் செயல் கட்சி தேர்தல் அறிக்கையை ஏற்ற வேளையில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், புதிய வேட்பாளர்களையும் தக்க சமயத்தில் அறிமுகம் செய்து வைக்கக் கட்சி திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களைச் சந்திக்கும் நடவடிக்கைளில், கட்சியும் அதன் வேட்பாளர்களும் வழிமுறைகளைப் பின்பற்றுவது உறுதி செய்யப்படும் என்று அது தெரிவித்தது.
நான்காம் தலைமுறைத் தலைவர்களும் Facebook போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.
COVID-19 சூழலிலிருந்து சிங்கப்பூரை வெளியே கொண்டுவர அரசாங்கத்துக்கு வலுவான அதிகாரம் தேவை என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் பதிவிட்டார்.
வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூரர்களின் தேவைகளுக்கே அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.