Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூச்சி ஒழிப்பு நிறுவனங்கள் இனி, மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

சுற்றுப்புறச் சேவைத் துறை மின்னிலக்கத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் உள்ள பூச்சி ஒழிப்பு நிறுவனங்களும் இனி, மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாசிப்புநேரம் -

சுற்றுப்புறச் சேவைத் துறை மின்னிலக்கத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் உள்ள பூச்சி ஒழிப்பு நிறுவனங்களும் இனி, மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேசிய சுற்றுப்புற அமைப்பும், ஊடக மேம்பாட்டு ஆணையமும் அது பற்றிய கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

முன்னதாக, துப்புரவு, கழிவு நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது பூச்சி ஒழிப்பு நிறுவனங்களும் மின்னிலக்கத் தீர்வுகளைப் பெறும் வகையில் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம், சுற்றுப்புறச் சேவைத் துறையின் எல்லா நிலைகளிலும் ஊழியரணியை மேம்படுத்த முடியும்.

பன்முனைத் திறன் கொண்ட நிபுணத்துவ ஊழியர்கள் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே மாறிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்