மூத்தோர் விரைவில் மலிவான விலைக்குத் திறன்பேசிகளை வாங்கலாம்
சிங்கப்பூரில் உள்ள மூத்தோர் விரைவில் மலிவான விலைக்குத் திறன்பேசிகளை வாங்கலாம்.
சிங்கப்பூரில் உள்ள மூத்தோர் விரைவில் மலிவான விலைக்குத் திறன்பேசிகளை வாங்கலாம்.
தேசிய அளவில் மூத்தோரை மின்னிலக்க முறைக்கு மாற்றும் திட்டத்தின் ஒருபகுதி அது.
இவ்வாண்டு இறுதிக்குள் 100,000 மூத்தோரின் மின்னிலக்கத் திறன்களை வளர்ப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இங்குள்ள 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மூத்தோருக்கு மலிவான விலையில் திறன்பேசிகளை விற்பனை செய்யும்.
வசதி குறைந்த மூத்தோர் Seniors Go Digital திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வகுப்புகளுக்குச் சென்றுவந்த பிறகு, ஓராண்டு கட்டணக் கழிவைப் பெற வகைசெய்யும் கைத்தொலைபேசித் திட்டத்துக்குப் பதிந்துகொள்ளலாம்.
5 வெள்ளி மாதந்தரக் கட்டணத்திற்குக் குறைந்தது 5 கிகாபைட்(gigabyte) தரவு வழங்கப்படும்.
அடிப்படைத் திறன்பேசியை வாங்குவதற்குக் குறைந்தது 20 வெள்ளியைச் செலுத்தினால் போதும் என்று கூறப்பட்டது.