வாசிப்பு, கணிதம், அறிவியல் பாடங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் உலகளவில் இரண்டாம் இடம்
வாசிப்பு, கணிதம், அறிவியல் மூன்றிலும் சீனா சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.
வாசிப்பு, கணிதம், அறிவியல் மூன்றிலும் சீனா சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.
சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
15 வயது மாணவர்களுக்காக நடத்தப்படும் Pisa எனப்படும் அனைத்துலக மாணவர் கணிப்புத் தேர்வில் அந்த முடிவுகள் தெரியவந்தன.
அனைத்துலக மாணவர் கணிப்புத் தேர்வு மூவாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
பள்ளிகளின் செயலாற்றல் அவற்றின் தரம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள OECD எனும் பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி அமைப்பு தேர்வை நடத்திவருகிறது.
இதற்கு முன் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டபோது தேர்வில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.