Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: JEM, Chong Pang City ஈரச்சந்தை-உணவு நிலையம் ஆகிய இடங்களுக்குக் கிருமித்தொற்று உறுதியானோர் சென்றிருந்தனர்

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொங் பாங் சிட்டி (Chong Pang City) ஈரச்சந்தை-உணவு நிலையம், ஜூரோங் ஈஸ்ட்டில் (Jurong East) அமைந்துள்ள JEM கடைத்தொகுதி ஆகியவற்றுக்குச் சென்றதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொங் பாங் சிட்டி (Chong Pang City) ஈரச்சந்தை-உணவு நிலையம், ஜூரோங் ஈஸ்ட்டில் (Jurong East) அமைந்துள்ள JEM கடைத்தொகுதி ஆகியவற்றுக்குச் சென்றதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 9ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்கள் அவ்விடங்களுக்குச் சென்றிருந்தனர்.

செம்பாவாங் காட்டேஜில் (Sembawang Cottage) அமைந்துள்ள McDonald's உணவகம், யீஷுன் Junction Nine கடைத்தொகுதியிலுள்ள Sheng Siong பேரங்காடி ஆகியவற்றுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதே இடங்களுக்குக் குறிப்பிடப்பட்ட நேரங்களில் சென்றிருந்த தனிநபர்கள், தங்களது சுகாதாரத்தை இரண்டு வாரங்களுக்கு அணுக்கமாகக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இருப்பினும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்த இடங்களைத் தவிர்க்கத் தேவையில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட இடங்களில் சுத்திகரிப்புப் பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டுதல்களைத், தேசியச் சுற்றுப்புற அமைப்பு வழங்குமென அது தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்