பிரதமர் லீ தென்கொரியப் பயணம்
இன்று முதல் 24ஆம் தேதி வரை சோலில் இருக்கும் திரு. லீ, அதன் பிறகு ஆசியான்-தென்கொரிய உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
பிரதமர் லீ சியென் லூங் இன்று தென்கொரியா செல்கிறார்.
வரும் 27ஆம் தேதி வரை அவர் அங்கிருப்பார்.
இன்று முதல் 24ஆம் தேதி வரை சோலில் இருக்கும் திரு. லீ, அதன் பிறகு ஆசியான்-தென்கொரிய உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
சோலில் திரு. லீ , தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னைச் சந்திப்பார்.
இரு தலைவர்களின் முன்னிலையில் மருந்துப் பொருள் உற்பத்தி, அறிவார்ந்த நகரம், இணைய ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் பல்வேறு இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.