Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நியூஸிலந்துப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஆர்டனுக்கு சிங்கப்பூர்ப் பிரதமர் லீ வாழ்த்து

நியூஸிலந்துப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஆர்டனுக்கு சிங்கப்பூர்ப் பிரதமர் லீ வாழ்த்து

வாசிப்புநேரம் -
நியூஸிலந்துப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஆர்டனுக்கு சிங்கப்பூர்ப் பிரதமர் லீ வாழ்த்து

கோப்புப்படம்: Gaya Chandramohan

பிரதமர் லீ சியென் லூங், நியூஸிலந்துப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டனுக்கு (Jacinda Ardern) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆர்டனின் வெற்றி, நியூஸிலந்து மக்கள் அவரது தலைமைத்துவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர்வதைக் காட்டுவதாகத்
திரு. லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாகக் கிருமிப் பரவல் நெருக்கடியை நியூஸிலந்து அரசாங்கம் கையாண்ட விதத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைப் பொதுத் தேர்தல் வெற்றி காட்டுவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரும், நியூஸிலந்தும் நெருங்கிய நட்பு நாடுகள்; நீண்டகாலப் பங்காளிகள் என்றார் பிரதமர் லீ.

திருவாட்டி ஆர்டன் சென்ற ஆண்டு மே மாதம் இங்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது, இருதரப்புக்குமிடையே மேம்பட்ட பங்காளித்துவத்துவத்துக்கு வகைசெய்யப்பட்டதை அவர் சுட்டினார்.

அதன் மூலம், கிருமிப் பரவல் சூழலில், விநியோகத் தொடர்பு, தடுப்பு மருந்து, மின்னிலக்கப் பொருளியல் ஆகியவை தொடர்பில் உறுதியான ஒத்துழைப்பு சாத்தியமானது.

இருநாட்டு நலன்களை மேம்படுத்தத் திருவாட்டி ஆர்டனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகப் பிரதமர் லீ கூறினார்.

அடுத்த ஆண்டு APEC தலைமைத்துவத்தைத் திருவாட்டி ஆர்டன் ஏற்கும்போது அவருக்கு ஆதரவு தரவும் திரு. லீ உறுதியளித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்