Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

14 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்

தனிநபர் நடமாட்டச் சாதனம் அதிகபட்சமாக 20 கிலோகிராம் எடை கொண்டிருக்கலாம். 

வாசிப்புநேரம் -
14 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்

(படம்:Facebook/Land Transport Authority)

சிங்கப்பூரில் கடந்த வார இறுதியில் நடந்த சோதனைகளில் 14 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டுநர்கள் சிலர் விதிகளை மீறியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

(படம்:Facebook/Land Transport Authority)

சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள் என 70 பேர் வார இறுதியில் தெம்பனீஸ், செங்காங், அங் மோ கியோ வட்டாரங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.

(படம்:Facebook/Land Transport Authority)

போலி அடையாளக் குறியீடு, வேகக் கட்டுப்பாட்டை மீறுதல், விதிமுறைகளுக்கு உட்படாத சாதனங்களைப் பயன்படுத்தியது-போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

(படம்:Facebook/Land Transport Authority)

தனிநபர் நடமாட்டச் சாதனம் அதிகபட்சமாக 20 கிலோகிராம் எடை கொண்டிருக்கலாம்.

(படம்:Facebook/Land Transport Authority)

ஆனால், சிலர் 45 கிலோகிராமுக்கும் அதிகமான எடை கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்