14 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்
தனிநபர் நடமாட்டச் சாதனம் அதிகபட்சமாக 20 கிலோகிராம் எடை கொண்டிருக்கலாம்.
சிங்கப்பூரில் கடந்த வார இறுதியில் நடந்த சோதனைகளில் 14 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுநர்கள் சிலர் விதிகளை மீறியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள் என 70 பேர் வார இறுதியில் தெம்பனீஸ், செங்காங், அங் மோ கியோ வட்டாரங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.
போலி அடையாளக் குறியீடு, வேகக் கட்டுப்பாட்டை மீறுதல், விதிமுறைகளுக்கு உட்படாத சாதனங்களைப் பயன்படுத்தியது-போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
தனிநபர் நடமாட்டச் சாதனம் அதிகபட்சமாக 20 கிலோகிராம் எடை கொண்டிருக்கலாம்.
ஆனால், சிலர் 45 கிலோகிராமுக்கும் அதிகமான எடை கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.