அதிரடித் திட்டத்துக்குப் பிந்திய 3ஆம் கட்டம்...மாற்றங்கள் என்னென்ன....ஒரே நிமிடத்தில்...
சிங்கப்பூரில் கிருமிப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டத்துக்குப் பிந்திய மூன்றாம் கட்டம் இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று அறிவித்தார்.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கிருமிப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டத்துக்குப் பிந்திய மூன்றாம் கட்டம் இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று அறிவித்தார்.
மூன்றாம் கட்டத்தில் என்னென்ன மாற்றங்களைப் பார்க்கலாம்...ஒரு சில வரிகளில்..
- அதிகபட்சம் 8 பேர் வெளியே ஒன்றாக உணவருந்தச் செல்லலாம்
- அல்லது மற்றவர் வீடுகளுக்குச் செல்லலாம்.
- கடைத்தொகுதிகள், சுற்றுலாத் தலங்களில் கூடுதலானோர் அனுமதிக்கப்படுவர்
- சிங்கப்பூரின் வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் இனி 250 பேர் வரை அனுமதிக்கப்படுவர். 50 பேர் வரையிலான குழுக்களில் வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறும்.
- 250 பேர் வரை கூடும் கலை, கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சுகாதார அறிவியல் ஆணையம், Pfizer-BioNtech நிறுவனங்களின் COVID-19 தடுப்புமருந்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
- சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.
- தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், சமூகத்துடன் இணைய வகைசெய்யும் முன்னோடித் திட்டம் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும்.