சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன? (காணொளி)
சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் கிரீஸ் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பிரெயஸ் (Pireas) என்ற கப்பலும் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பொலாரிஸ் என்ற கப்பலும் சனிக்கிழமை (பிப்ரவரி 9) மதியம் மோதின.
சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் கிரீஸ் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பிரெயஸ் (Pireas) என்ற கப்பலும் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பொலாரிஸ் என்ற கப்பலும் சனிக்கிழமை (பிப்ரவரி 9) மதியம் மோதின.
மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பொலாரிஸ் கப்பல் 2017இல் கட்டப்பட்டது.
கடற்பகுதியின் உரிமை குறித்து சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சர்ச்சை தொடரும் வேளையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியிலிருந்து அக்கப்பல் சிங்கப்பூர்க் கடற்பகுதியினுள் வந்து செல்கிறது.
இரு கப்பல்களும் மோதிய காட்சி காணொளியில்: