Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆயுதமேந்திக் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது

ஆயுதமேந்திக் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது

வாசிப்புநேரம் -

ஆயுதமேந்திக் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வெள்ளிக்கிழமை இரவு பதினொன்றரை மணியளவில் ஜாலான் புக்கிட் மேராவில் மூன்று பதின்மவயதினரை ஒரு குழு தாக்குவதாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அந்தக் குழுவில் இருந்த ஒருவர் வளைந்த கத்தியை வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட 14 வயதும் 15 வயதும் கொண்ட பதின்மவயதினர் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

பதின்ம வயதினர் சந்தேக நபர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும் தகராறு காரணமாக அவர்கள் தாக்கப்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

5 சந்தேக நபர்கள் மீது ஆயுதமேந்திக் கலவரத்தில் ஈடுபட்டதாக நாளை குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்