450 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 197 பேர் கைது
மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 197 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 197 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 85 பேர் பெண்கள்.
இம்மாதம் 12ஆம் தேதியிலிருந்து நேற்று வரை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
சுமார் 450 மோசடிச் சம்பவங்கள் மூலம் 2.1 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை அவர்கள் ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
இணையக் காதல், இணைய வர்த்தகம், கடன் ஆகியவை தொடர்பான மோசடிச் சம்பவங்கள் அவை.
பண மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற முயன்றது ஆகியவை தொடர்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.