Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் COVID-19 நெருக்கடியைக் கடந்து வருவதற்கான முக்கியச் சோதனைத்தளம் இந்தப் பொதுத் தேர்தல்: மக்கள் செயல் கட்சி

வரும் பொதுத்தேர்தல்,சிங்கப்பூர் COVID-19 நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதை  மையமாகக் கொண்டுள்ளது. வாக்காளர்கள் அதனை நன்கு அறிந்துகொண்டுள்ளனர் என்று மக்கள் செயல் கட்சித் தலைவர்கள் பிரசார இறுதிநாளான இன்று தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் COVID-19 நெருக்கடியைக் கடந்து வருவதற்கான முக்கியச் சோதனைத்தளம் இந்தப் பொதுத் தேர்தல்: மக்கள் செயல் கட்சி

(படம்: PAP)

வரும் பொதுத்தேர்தல்,சிங்கப்பூர் COVID-19 நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதை மையமாகக் கொண்டுள்ளது. வாக்காளர்கள் அதனை நன்கு அறிந்துகொண்டுள்ளனர் என்று மக்கள் செயல் கட்சித் தலைவர்கள் பிரசார இறுதிநாளான இன்று தெரிவித்தனர்.

வேலைகளைப் பாதுகாக்க முடியுமா, முதலீடுகளை ஈர்க்க இயலுமா, சிரமத்தை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை ஏற்பாடு செய்ய இயலுமா என்பவையே இந்தப் பொதுத் தேர்தலில் கட்சிகளும், வேட்பாளர்களும் எதிர்நோக்கும் முக்கியச் சோதனைகள் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் அந்த 3 எளிய, அடிப்படைக் கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொண்டு அதன் அடிப்படையிலேயே வாக்களிப்பர் என்று மக்கள் செயல் கட்சி நம்புவதாகத் திரு. சான் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்