Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சென்ற ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நல்ல சம்பளத்தில் உள்ளனர்: ஆய்வு

சிங்கப்பூரிலுள்ள பலதுறைத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் சென்ற ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்திருப்பதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  

வாசிப்புநேரம் -
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சென்ற ஆண்டு பட்டம் பெற்றவர்கள் நல்ல சம்பளத்தில் உள்ளனர்: ஆய்வு

(கோப்புப் படம்)

சிங்கப்பூரிலுள்ள பலதுறைத் தொழில் நுட்பக் கல்லூரிகளில் சென்ற ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்திருப்பதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நன்யாங், நீ ஆன், ரிபப்ளிக் உட்பட ஐந்து பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் அந்த ஆய்வில் பங்கேற்றன.

2019 இல் பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் வேலைக்குச் சேர்ந்து விட்டதாக சுமார் 91 விழுக்காட்டினர் கூறினார்.

2018 இல் அந்த விகிதம் எண்பத்து ஒன்பதரை விழுக்காடாக இருந்தது.

சுகாதார அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களை விட கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல சம்பளம் பெறுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்