Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வசீகரிக்கும் வாசகங்களோடு வலம் வரும் மாணவர்களின் பொங்கல் வாழ்த்து அட்டைகள்

இப்படி அழகிய வாசகங்களைக் கொண்டு பொங்கல் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தனர் தொடக்கநிலை 5-இல் பயிலும் மாணவர்கள்.

வாசிப்புநேரம் -

அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க..
இனிய தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துகள்

இப்படி அழகிய வாசகங்களைக் கொண்டு பொங்கல் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தனர் தொடக்கநிலை 5-இல் பயிலும் மாணவர்கள்.

வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!

பொங்கல் வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டியில் வெற்றிபெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் இதோ..

1. மித்தேஷா - ஜுன்யுவான் தொடக்கப்பள்ளி (Junyuan Primary School)

2. ஸ்மிட்டா சிவகுமார் - உட்குரோவ் தொடக்கப்பள்ளி(Woodgrove Primary School)

3. ஹரிஹரன் - கெமிங் தொடக்கப்பள்ளி (Keming Primary School)

4. அவினாஷ் - ஹென்றி பார்க் தொடக்கப்பள்ளி (Henry Park Primary School)

5. அனுஸ்ரீ - சவுத் வியூ தொடக்கப்பள்ளி(South View Primary School)

6. விமல் - ஜியிங் தொடக்கப்பள்ளி (Juying Primary School)

பொங்கலை ஒட்டி செய்திப்பிரிவு, கடந்த 3 ஆண்டுகளாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. பிள்ளைகள் தமிழர் பண்பாடு குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது போட்டிகளின் நோக்கம்.

போட்டியில் பல பள்ளிகள் கலந்துகொண்டு, 100க்கும் மேற்பட்ட படைப்புகளை அனுப்பிவைத்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்