முதலில் கிருமித்தொற்று…இப்போது மழை… அடிபடும் பொங்கல் விற்பனை
கிருமித்தொற்று நெருக்கடியால் கடந்த ஆண்டு லிட்டில் இந்தியாவின் வர்த்தகர்கள் பாதிப்படைந்தனர்.
கிருமித்தொற்று நெருக்கடியால் கடந்த ஆண்டு லிட்டில் இந்தியாவின் வர்த்தகர்கள் பாதிப்படைந்தனர்.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வர்த்தகம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பெய்யும் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை திடீரென்று பெய்கிறது… திடீரென்று நின்றுபோகிறது…
வாடிக்கையாளர்களின் வருகை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகக் கடைக்காரர்கள் ‘செய்தி’யிடம் கூறினர்.
சிங்கப்பூரில் மட்டுமில்லாமல், பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் தருவிக்கப்படும் இந்தியாவிலும் மழை அதிக அளவில் பெய்கிறது.
கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.