பொங்கலோ பொங்கல்!
வாசலில் கோலம்.... வீட்டில் கரும்பு .... அடுப்பில் பொங்கல்...கரும்பைச் சுவைக்கவும் பொங்கலைச் சாப்பிடவும் காத்திருக்கும் பிள்ளைகள்....
வாசலில் கோலம்.... வீட்டில் கரும்பு .... அடுப்பில் பொங்கல்...கரும்பைச் சுவைக்கவும் பொங்கலைச் சாப்பிடவும் காத்திருக்கும் பிள்ளைகள்....
பொங்கல் திருநாளில் இவையே வழக்கமாகக் காணக்கூடிய காட்சிகள்.
இவ்வாண்டின் பொங்கல் திருநாள் வாரநாளில் வந்திருப்பதால் பலர் வேலைமுடிந்து இல்லம் திரும்பிய பின் பொங்கலைக் கொண்டாட எண்ணியிருக்கலாம்.
பிள்ளைகள் பள்ளி முடிந்து வந்து குடும்பத்தாருடன் ஒன்றாய் 'பொங்கலோ பொங்கல்!' என்று கூறுவது அவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் எனலாம்.
'தமிழர் திருநாள்' என்றும் போற்றப்படும் இந்தத் திருநாளில், அனைவருக்கும் செய்தியின் பொங்கல் நல்வாழ்த்துகள்!