Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியத்தின் மரணம் இயற்கையானதே' - மரண விசாரணை உறுதி

சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், Muay Thai எனும் குத்துச்சண்டைப் போட்டியின்போது மரணமடைந்தது இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியத்தின் மரணம் இயற்கையானதே' - மரண விசாரணை உறுதி

(படம்: Asia Fighting Championship)

சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், Muay Thai எனும் குத்துச்சண்டைப் போட்டியின்போது மரணமடைந்தது இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது.

2017 செப்டம்பர் 23ஆம் தேதி நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் பிரதீப் கலந்துகொண்டார்.

அவர், 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார்.

போட்டிக்கு முன்னர் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பிறகே, பிரதீப் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையின்போது, குத்துச்சண்டைப் போட்டியின்போது பதிவான காணொளிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

உடல் கட்டமைப்புச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான 32 வயது பிரதீப் இதயச் செயலிழப்பால் மாண்டதாக மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்