பிராட்டா தர மறுத்த ஆடவரைக் கத்தியால் குத்தியவருக்குச் சிறை
இலவசமாக பிராட்டா கொடுக்க மறுத்த சமையல்காரரைக் கத்தியால் குத்திய ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக பிராட்டா கொடுக்க மறுத்த சமையல்காரரைக் கத்தியால் குத்திய ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்குச் சுமார் 10 மாதச் சிறைத் தண்டனையும், 6 பிரம்படிகளும், 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி மாலை கிளமெண்ட்டி வெஸ்ட் ஸ்ட்டீரீட் புளோக் 710 இல் உள்ள ஓர் உணவகத்தில் நடந்தது.
முருகன் ஜோசப் என்னும் 45 வயது ஆடவர் தமது இரு நண்பர்களுடன் உணவகத்திற்குச் சாப்பிட சென்றிருக்கிறார்.
அப்போது பிராட்டாவை இலவசமாகத் தரும்படி கடைக்காரரிடம் கேட்டிருக்கிறார். அது வாக்குவாதமாக மாறி சண்டை வலுத்தது.
சமையல்காரரை முருகன் தாக்கியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
முருகன் மீது , ஆபத்து விளைவிக்கும் பொருளை வைத்திருந்தது, தாக்குதல் நடத்தியது, திருட்டு என்று 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
முருகன் மீது ஏற்கனவே மதுபோதையில் தகராறு செய்தது உட்பட மற்ற குற்றச்சாட்டுகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட அவரது நண்பர்கள் மீது விசாரணை தொடர்கிறது.