Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சர்ச்சைக்குரிய காணொளியைத் தயாரித்த Preetiplsக்கும் அவரது சகோதரருக்கும் நிபத்தனையுடன்கூடிய எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய Rap காணொளியைத் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த  Preetiplsக்கும் அவரது சகோதரர் சுபாஸ் நாயருக்கும் காவல்துறை நிபத்தனையுடன்கூடிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
சர்ச்சைக்குரிய காணொளியைத் தயாரித்த Preetiplsக்கும் அவரது சகோதரருக்கும் நிபத்தனையுடன்கூடிய எச்சரிக்கை

(படம்: @preetipls/Instagram, @subhasmusic/Instagram)

சிங்கப்பூர்: சர்ச்சைக்குரிய Rap காணொளியைத் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த Preetiplsக்கும் அவரது சகோதரர் சுபாஸ் நாயருக்கும் காவல்துறை நிபத்தனையுடன்கூடிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஜூலை 29ஆம் தேதி காணொளிபற்றிய தகவல் கிடைத்ததும் அதுகுறித்த விசாரணை தொடங்கியதாகக் காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.

அந்தக் காணொளி சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. காணொளி அனுமதிக்கப்பட்டால் அதைப் பின்பற்றி மற்ற சமூகங்களைக் குறிவைத்துத் தயாரிக்கப்படும் காணொளிகளுக்கும் அனுமதி வழங்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று காவல்துறை சொன்னது. நாளடைவில் அது சமுதாயத்தில் இனவாதத்தைத் தூண்டுவதுடன் நல்லிணக்கத்தையும் பாதிக்கும், இதனால் சிறுபான்மை இனத்தவரே அதிகம் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

காணொளியின் தொடர்பில் பிரீத்தி நாயரும் சுபாஸ் நாயரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இருவருக்கும் இன்று (ஆகஸ்ட் 14) 24 மாதத்திற்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

சர்ச்சைக்குரிய E-Pay விளம்பரத்தின் தொடர்பில் காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டது. அதில் சட்டவிரோதமான கருத்து இல்லாததால் அதன் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று காவல்துறை விளக்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்