Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விளையாட்டுப் பொருள்களை நன்கொடையாக வழங்கிய பாலர் பள்ளி மாணவர்கள்

கரையோரப் பூந்தோட்டத்தில் நடைபெறும் சிறுவர் விழாவில் விளையாட்டுப் பொருள்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர் 45 பாலர் பள்ளி மாணவர்கள்.

வாசிப்புநேரம் -
விளையாட்டுப் பொருள்களை நன்கொடையாக வழங்கிய பாலர் பள்ளி மாணவர்கள்

படம்: Gardens by the Bay

கரையோரப் பூந்தோட்டத்தில் நடைபெறும் சிறுவர் விழாவில் விளையாட்டுப் பொருள்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர் 45 பாலர் பள்ளி மாணவர்கள்.

அந்த மாணவர்கள் குளோபல் மைண்ட்ஸ் பாலர் பள்ளியைச் (Global Mindz Eden Preschool) சேர்ந்தவர்கள்.

சிறுவர் விழா, பிள்ளைகளிடம் சமூக உணர்வை வளர்க்க உதவுவதாக ஏற்பாட்டுக் குழு கூறியது.

வருகையாளர்கள் புதிய, பழைய பொம்மைகள், விளையாட்டுத் தொகுப்புகள், பலகை விளையாட்டுகள் போன்றவற்றை நன்கொடையாகக் கொடுக்கலாம்.

சேகரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் விழாவின் முடிவில் 3 குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சுமார் 300 குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கப்படவிருக்கின்றன.

இம்மாதம் 30ஆம் தேதி வரை கரையோரப் பூந்தோட்டத்திற்குச் சென்று விளையாட்டுப் பொருள்களை நன்கொடையாகக் கொடுக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்