கிருமிப்பரவல் முடிந்தபின்பும் அனைத்துலகச் சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய உலகக் கட்டமைப்பில் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்: அதிபர் ஹலிமா
கிருமிப்பரவல் முடிந்தபின்பும் அனைத்துலகச் சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய உலகக் கட்டமைப்பில் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்: அதிபர் ஹலிமா
கிருமிப்பரவல் முடிவடைந்த பின்னரும் அனைத்துலகச் சமூகம், வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய உலகக் கட்டமைப்பில் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென, சிங்கப்பூர் அழைப்பு விடுத்திருக்கிறது.
ஆசிய வருடாந்திரக் கருத்தரங்குக்கான Boao மாநாட்டுக்கென முன்பதிவு செய்யப்பட்ட உரையில், அதிபர் ஹலிமா யாக்கோப், அவ்வாறு கேட்டுக்கொண்டார்.
பருவநிலை மாற்றம், பயங்கரவாதம்-உள்ளிட்ட எல்லைதாண்டிய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால், அவற்றுக்கு உலகளாவிய தீர்வுகள் தேவை என்றார் அவர்.
COVID-19 நோய்ப்பரவல் அளித்துள்ள படிப்பினைகளில் இருந்து, அனைத்துலகச் சமூகம் பாடம் கற்றுக்கொள்ள முடியுமெனத் தாம் நம்புவதாகத் திருவாட்டி ஹலிமா கூறினார்.