Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் உயர்ந்துள்ளது : நகரச் சீரமைப்பு ஆணையம்

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மார்ச் மாதம் உயர்ந்ததாக நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியுள்ளது.  

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மார்ச் மாதம் உயர்ந்ததாக நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியுள்ளது.

போன ஆண்டின் மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில்
இந்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனை சுமார் 47 விழுக்காடு கூடியது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு வெளியான பலதரப்பட்ட தனியார் வீட்டுத் திட்டங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்தன.

மார்ச் மாதத்தில் 10 புதிய தனியார் வீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

25 புதிய தனியார் வீடுகள், சுமார் 5 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டன.

2013ம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு ஒரே மாதத்தில் இந்த விலைக்கு இத்தனை வீடுகள் விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்