ஜூலை மாதம் அதிகரித்த தனியார் வீட்டு விற்பனை
தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 55 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 55 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சொத்துச் சந்தையின் வேகத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த மாதத் தொடக்கத்தில் நடப்புக்கு வந்த போது பலர் பதற்றத்தில் வீடுகளை வாங்கியது அதற்குக் காரணம்.
எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து ஜூலை மாதம் 1,724 வீடுகள் விற்கப்பட்டன. கடந்த ஆண்டு அதே காலக்கட்டத்தில் 1,112 வீடுகள் மட்டுமே விற்பனையாகின.
எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் உள்ளிட்ட மொத்தம் 1,776 வீடுகள் ஜூலை மாதம் விற்கப்பட்டன. ஜூன் மாதத்தில் 706 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டன.