தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள்: 98.4 விழுக்காட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதி
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை இந்த ஆண்டு எழுதிய சுமார் 40,000 மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை இந்த ஆண்டு எழுதிய சுமார் 40,000 மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்கள் புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வெழுதிய முதல் தொகுதி மாணவர்கள்.
விரைவு நிலைக்குத் தகுதிபெற்ற மாணவர்கள்: 68.4 விழுக்காடு
சென்ற ஆண்டு: 66.3 விழுக்காடு
வழக்கநிலைக்குத் தகுதிபெற்ற மாணவர்கள்: 19 விழுக்காடு
சென்ற ஆண்டு: 21.2 விழுக்காடு
வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவுக்குத் தகுதிபெற்ற மாணவர்கள்: 11.1 விழுக்காடு
சென்ற ஆண்டு: 11 விழுக்காடு
உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதிபெற்ற மாணவர்கள், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதன்கிழமை காலை 11.30 மணியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதி மதியம் 3 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுகள் டிசம்பர் 22க்கும் 24க்கும் இடைப்பட்ட நாள்களில் வெளியிடப்படும்.