Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ராபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் மின்சாரத் தடை

ராபிள்ஸ்சிட்டி (Raffles City) கடைத்தொகுதி இன்றிரவு சற்று நேரம் இருளில் மூழ்கியது.

வாசிப்புநேரம் -
ராபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் மின்சாரத் தடை

(படம்: Twitter/Alexis Cheong)


ராபிள்ஸ்சிட்டி (Raffles City) கடைத்தொகுதி இன்றிரவு சற்று நேரம் இருளில் மூழ்கியது.

கடைத்தொகுதியின் சில பகுதிகளில் இரவு 8 மணி வாக்கில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகக் கடைத்தொகுதி நிர்வாகம் அதன் Facebook பக்கத்தில் பதிவுசெய்தது.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரத்தை திருப்பிவிட பணிகள் நடந்து வருவதாகவும் தடையினால் ஏற்பட்ட பாதிப்புக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் நிர்வாகம் பதிவில் குறிப்பட்டது.

சுமார் 9.40 மணிக்கு மின்சார விநியோகத்தை வழக்க நிலைக்கு திருப்ப, கடைத்தொகுதி சற்று முன்னதாக மூடப்படும் என்று தெரிவித்தது.

கடைத்தொகுதி நாளை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்தது நிர்வாகம்.

உணவகத்தின் சாப்பிடும்போது மின்சாரத் தடை எற்பட்டதால் அவசரமாக வெளியேற்றப்பட்ட ஒருவர், உணவுக்காக இழப்பீடு கேட்டுள்ளார்.

கடைத்தொகுதியின், மின்படிகள், தானியக்க வங்கி இயந்திரங்களும் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறினர் சிலர்.

மின்சாரத் தடையைப் பற்றி எவ்வித அறிவிப்பு செய்யப்படவில்லை என்றும் ஒலிப்பெருக்கிகளின் மூலம் சீனப் புத்தாண்டு இசை மட்டும் ஒளிபரப்பானது என்றனர் சிலர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்