சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படும் ராபிள்ஸ் சிலை
சிங்கப்பூர் ஆற்றின் கரையோரமாக இருக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸின் சிலை சீரமைப்புப் பணிகளுக்காக அடுத்த வாரத்தின் முற்பகுதியில் மூடப்படும்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிங்கப்பூர் ஆற்றின் கரையோரமாக இருக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸின் சிலை சீரமைப்புப் பணிகளுக்காக அடுத்த வாரத்தின் முற்பகுதியில் மூடப்படும்.
ஏப்ரல் 22 முதல் 24 வரை அந்தப் பணிகள் நடைபெறும். அப்போது சிலையைப் பொதுமக்கள் பார்வையிட முடியாது.
சீரமைப்புப் பணிகளால் பொதுமக்களுக்கு வசதிக் குறைவு ஏற்படலாம் என்று கூறிய சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் அவர்களின் புரிந்துணர்வுக்கு வேண்டுகோள் விடுத்தது.