இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள ஒருசில வர்த்தகங்கள்
சிங்கப்பூரில் உணவு உற்பத்தியாளர்களும், சில்லறை வர்த்தகர்களும் இன்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் உணவு உற்பத்தியாளர்களும், சில்லறை வர்த்தகர்களும் இன்றுமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
வீட்டிலிருந்தே பலகாரங்களைச் செய்து விற்போரும் இன்று தங்கள் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.
சிகையலங்காரக் கடைகள், செல்லப் பிராணிகளுக்கான தீவனம் விற்பனை செய்வோர்,சலவைக்கூடங்கள் ஆகியனவும் பாதுகாப்பான இடைவெளி விதியைப் பின்பற்றி மீண்டும் செயல்படலாம்.
சிங்கப்பூர், கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தின் 5ஆவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் அது சாத்தியமாகிறது.
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் ஜூன் முதல் தேதி முடிவுக்கு வரும்.