Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிம்ஸ் அவென்யூவில் சண்டை - 6 பேர் கைது

போக்குவரத்து விபத்து ஒன்றைத் தொடர்ந்து சிலர் இரு ஆடவர்களைத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிம்ஸ் அவென்யூவில் சண்டை - 6 பேர் கைது

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

சிம்ஸ் அவென்யூவில் சண்டை நடந்ததாகக் காவல்துறைக்குக் கிடைத்த புகாரின் பேரில் 6 ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புகார் கிடைத்த ஒரு மணி நேரத்துக்குள் 24இலிருந்து 35 வயதுக்கு இடையிலானோர் கைதுசெய்யப்பட்டனர்.

போக்குவரத்து விபத்து ஒன்றைத் தொடர்ந்து சிலர் இரண்டு ஆடவர்களைத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து வேன் ஒன்றில் தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது.

காவல்துறை கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணைகளில் திரட்டப்பட்ட தகவல்கள் கொண்டும் கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக நால்வர்மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்.

மேலும் இரண்டு சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.


கலவரத்தின் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பிரம்படியோடு 7 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்